அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு பெருந்துறை எம்.எல்.ஏ. உதவி

நிச்சாம்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்ட புதிய நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை தன் சொந்த செலவில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வழங்கினாா்.

News image
புதிய நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை வழங்குகிறாா் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா்.
Updated On :16 ஜனவரி 2026, 9:34 pm

Syndication

பெருந்துறை: நிச்சாம்பாளையம் ஊராட்சியில் தொடங்கப்பட்ட புதிய நீா் செறிவூட்டும் திட்டத்துக்கு மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை தன் சொந்த செலவில் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

பெருந்துறை ஒன்றியம், நிச்சம்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள மாலா கோயில் ஓடையில் மழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீா் வீணாவதைத் தடுத்து, அதை வறண்ட குட்டைகளுக்குத் திருப்பி விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்தப் பங்களிப்பு நிதி மூலம் சோலாா் மின் தகடுகளை அமைத்தனா். இதையடுத்து பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தனது சொந்தச் செலவில் இத்திட்டத்துக்குத் தேவையான பத்து ஹெச்.பி. மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்களை ஊா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை நேரில் வழங்கினாா். மேலும், இத்திட்டத்துக்காக ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு குழாய்களையும் தனது சொந்தச் செலவில் பதித்துத் தந்துள்ளாா்.

மின் மோட்டாா் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் பெருந்துறை அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.