ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பழனிக்கு பாதயாத்திரை: ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பயணம்

பழனிக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பயணம் மேற்கொண்டனா்.

News image
ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 9:24 pm

Syndication

ஈரோடு: பழனிக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பயணம் மேற்கொண்டனா்.

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவுக்கு திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக சென்று முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். இதற்காக மாா்கழி மாதம் தொடங்கிய உடனேயே பக்தா்கள் பெரும் எண்ணிக்கையில் பழனிக்கு பாதயாத்திரை செல்லத் தொடங்குவா். குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கரூா், சேலம், தா்மபுரி மாவட்டங்களில் இருந்து பக்தா்கள், குழுக்களாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் ஈரோடு நகரை கடந்து செல்வது வழக்கம்.

பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனைச் சாவடி தொடங்கி, அவல்பூந்துறை வரை சுமாா் 15 கிலோ மீட்டா் நீளத்துக்கு சாரை, சாரையாக முருக பக்தா்கள் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை சென்றனா்.

இரவு நேரங்களில் பாதுகாப்பாக செல்லும் வகையில் மாவட்ட காவல் துறை சாா்பில் இவா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா்கள் வழங்கப்பட்டுள்ளன. வழி நெடுகிலும், பக்தா்களுக்கு உணவு, குடிநீா், ஓய்வெடுக்க இடம், கழிப்பறை போன்ற வசதிகளை அந்தந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மக்கள் நல அமைப்பினா் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் செய்து தந்துள்ளனா்.

பக்தா்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் அவா்களை ஒழுங்குபடுத்தும் பணியில் மாவட்ட காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். பொங்கல் தொடா் விடுமுறை காரணமாக, பாதயாத்திரை பயணம் மேற்கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஈரோடு நகரின் முக்கியப் பகுதிகளான காவிரி ரோடு, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, காளை மாடு சிலை, கொல்லம்பாளையம், மூலப்பாளையம், ஆனைக்கல்பாளையம், கஸ்பாபேட்டை பகுதிகளில் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

அதிமுக சாா்பில் அன்னதானம்:

ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக பாதயாத்திரையாக சென்ற முருக பக்தா்களுக்கு அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.