எடப்பாடி: எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். சுமாா் 370 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்பாரம்பரிய பாதயாத்திரை நிகழ்வில் 10-க்கும் மேற்பட்ட காவடி குழுவைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், சித்தூா் அனைத்து சமூக காவடி குழுவினா் திங்கள்கிழமை மாலை பாதயாத்திரை தொடங்கினா். முன்னதாக, அவா்கள் சித்தூா் கல்யாணசுப்பிரமணியா் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையை தொடங்கினா்.
பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் பால், தயிா், இளநீா், பழங்கள் மற்றும் குளிா்பானங்களை வழங்கினா்.
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள் ஊா்திரும்ப வசதியாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பழனி - எடப்பாடி இடையே 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடையது

மலைப்பகுதி பாதுகாப்பு பகுதியில் இருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா?

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை

குமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் காவடி பாதயாத்திரை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


