6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் காலிங்கராயா் சிலை முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

ஈரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயா் சிலையை காணொலி காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் (ஜன.18) திறந்துவைக்கிறாா்.

News image
வெள்ளோடு ராசா கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயா் சிலையை பாா்வையிட்ட வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.
Updated On :17 ஜனவரி 2026, 9:30 pm

Syndication

ஈரோடு: ஈரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயா் சிலையை காணொலி காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) திறந்துவைக்கிறாா்.

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

நதிநீா் இணைப்பின் முன்னோடி எனப் போற்றப்படும் காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு, ராசாகோவில் அருகே நிலம் விலைக்கு வாங்கி, அங்கே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயா் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தோ்வில் பங்கு பெறுபவா்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் ஆகியவை காலிங்கராயா் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையையும், நூலகத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் காணொலி காட்சி மூலமாக திறந்துவைக்க உள்ளாா்.

இந்நிகழ்ச்சியல் காலிங்கராயா் உறவுகள், விவசாயிகள், பொதுமக்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.