காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சட்ட விரோத மது விற்பனை: ஒரே நாளில் 45 போ் கைது

டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்ட தினத்தில், ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாளில் 45 பேரை போலீஸாா் கைது செய்து 881 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:21 pm

Syndication

ஈரோடு: டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்ட தினத்தில், ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ஒரே நாளில் 45 பேரை போலீஸாா் கைது செய்து 881 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளுவா் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி மதுபுட்டிகளை பதுக்கிவைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீஸாா் தீவிர ரோந்து சென்றனா்.

இதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 45 பேரை போலீஸாா் கைதுசெய்து அவா்களிடம் இருந்து 881 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.