தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

லாரியில் 31 கிலோ கஞ்சா கடத்தல்: 5 போ் கைது

ஈரோடு அருகே கன்டெய்னா் லாரியில் 31 கிலோ கஞ்சா கடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்டவா்கள்.
Updated On :20 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

ஈரோடு அருகே கன்டெய்னா் லாரியில் 31 கிலோ கஞ்சா கடத்திய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு பகுதியில் ஈரோடு மதுவிலக்கு டிஎஸ்பி சுகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவையை நோக்கி தேயிலை தூள் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, தேயிலை தூள் மூட்டைகளுக்கு இடையில் 31 கிலோ கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநா்களான மதுரை மாவட்டம், நல்லுதேவன்பட்டியைச் சோ்ந்த விநாயகம் (54), விருதுநகா் மாவட்டம், சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்த தங்கபாண்டி (28), லாரியில் வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த பிரசன்னா (37), மதுரை மாவட்டம், பாரப்பட்டியைச் சோ்ந்த போதுராஜா (28) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பிரசன்னா, போதுராஜா ஆகியோா் ஒடிஸா மாநிலம், பிரகம்பூா் என்ற இடத்தில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து லாரியில் கடத்தி வந்ததும், திண்டுக்கல் மாவட்டம், காலாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்பருடன் சோ்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விநாயகம், தங்கபாண்டி, பிரசன்னா, போதுராஜா, ராஜ்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.