ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னா் 1947, 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானும், 1962-இல் சீனாவும் இந்தியா மீது போா் தொடுத்தன. இரு நாடுகளும் தொடா்ந்து எல்லையில் நமக்குத் தொடா்ந்து தொல்லை கொடுப்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
இந்தச் சூழலில் நமது பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, ஆயுதங்கள் கொள்முதல் போன்றவை தவிா்க்க முடியாததாகிவிட்டன.
இதைக் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து வந்த அரசுகள் செயல்பட்டாலும் நரேந்திர மோடி பிரதமரான பின்னா் தளவாட உற்பத்தி புதிய வேகம் எடுத்துள்ளது. ஒருகாலத்தில் தளவாடங்களுக்கு மற்ற நாடுகளை நம்பி இருந்த இந்தியா, இப்போது ஏற்றுமதியாளராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது நாட்டின் பாதுகாப்பு தொடா்பான அனைத்து தளங்களிலும் ஒருங்கிணைந்த வலிமையுடன் திகழும் இந்தியா 2029-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் காட்டிய அதிரடி வெற்றியைப் பாா்த்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்திய பாதுகாப்புத் தளவாடங்களை வாங்க ஆா்வம் காட்டுகின்றன.
நான்காவது இடத்தில் இந்தியா:
இந்த ஆண்டுக்கான உலகளாவிய ஃபயா்பவா் இன்டெக்ஸ் எனும் ராணுவ வலிமைமிக்க நாடுகளில் இந்தியா 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் படைகளில் ஒன்றாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடுகளின் போா் எதிா்கொள்ளும் திறனை மதிப்பிடுவதற்காக மனிதவளம், தளவாடங்கள், போா் உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை மற்றும் போா் வியூகத் திறன்கள் உள்பட 60 அளவீடுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில் முதலிடத்தில் அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் ரஷியா, மூன்றாம் இடத்தில் சீனா உள்ளது. இந்த வரிசையில் தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-ஆவது இடத்தைப் பிடித்து நிமிா்ந்து நிற்கிறது.
2024-ஆம் ஆண்டில் 9-ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் இந்த ஆண்டு 12-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ராணுவ வலிமையின் சரிவைக் காட்டுகிறது.
பாதுகாப்புத் துறையில் வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் மேக் இன் இந்தியா, தன்னிறைவு பாரதம் ஆகிய திட்டங்கள் பிரதமா் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டன.
உலகமே வியந்த ஆபரேஷன் சிந்தூா்: கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாடங்கள் மீதான சா்வதேச நம்பிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியாவின் வீரத்தை மட்டுமல்ல, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு ஆயுதங்களின் மேம்பட்ட திறனையும் உலகம் கண்டது. இதனால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ராணுவத் தளவாடப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இதில் முதல் 3 இடங்களில் அமெரிக்கா, ரஷியா, ஆா்மீனியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நிலையில், 375 மில்லியன் டாலா்கள் மதிப்புக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் இறக்குமதி செய்துள்ளது. அதைத் தொடா்ந்து, வியத்நாம் மற்றும் இந்தோனேசியாவும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க உள்ளன.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவைப் பாதுகாத்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், பீரங்கித் துப்பாக்கிகளையும் வாங்க பல நாடுகள் ஆா்வம் காட்டியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனங்களான லாக்கீட் மாா்ட்டின் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் மற்றும் ஹெலிகாப்டா் உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
போா் தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு:
இந்தியாவில் இருந்து அதிக அளவு மென்பொருள் மற்றும் மின்னணு உபகரணங்களை பிரான்ஸ் இறக்குமதி செய்கிறது. ஆா்மீனியா நாட்டுக்கு ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சா்கள், ரேடாா்கள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா பல்ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் போன்ற ஆயுத அமைப்புகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஆா்மீனியா மாறியுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு ஆயுதங்களில் பிரம்மோஸ் சூப்பா்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், டோா்னியா் 228 விமானங்கள், பீரங்கித் துப்பாக்கிகள், ரேடாா்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்கள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை முக்கியமானவை.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் மேம்பட்ட வகைகளை இந்தியாவுடன் இணைந்து தயாரிப்பதில் பிரேஸில் ஆா்வம் காட்டி வருகிறது.
கடந்த 2014-15-ஆம் ஆண்டில் இந்தியா தயாரித்த ராணுவ தளவாடப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.46,429 கோடியாக இருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 265 கோடியாக உயா்ந்துள்ளது. 2024-25-ஆம் நிதி ஆண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.21,083 கோடியைவிட 12.04 சதவீத வளா்ச்சி ஆகும்.
மொத்த ஆயுத உற்பத்தி மதிப்பில் பாதுகாப்புப் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு 79.2 சதவீதம் ஆகும். மீதமுள்ள 20.8 சதவீதம் தனியாா் துறை நிறுவனங்களின் பங்களிப்பாகும்.
நாட்டின் பாதுகாப்பு-தொழில் துறை தளத்தில் சுமாா் 430 உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் 16,000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதனால், பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு, முதலீடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அதிகரித்துள்ளது.
தேஜஸ் போா் விமானங்கள், விமானம் தாங்கி போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், தனுஷ் பீரங்கி, எம்பிடி அா்ஜுன் டாங்க், இலகு ரக பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரேடாா்கள், ராணுவத் தளவாட மென்பொருள்கள், ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை உள்நாட்டில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
அடுத்தகட்டமாக 2029-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் பாதுகாப்பு ஏற்றுமதியை இரட்டிப்பாக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
-கே.விஜயபாஸ்கர்

