தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காா் மீது இருசக்கர வாகனம் மோதி 11 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

அந்தியூா் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெற்றோருடன் சென்ற 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெற்றோருடன் சென்ற 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

அந்தியூரை அடுத்த காட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (20). கூலி தொழிலாளி. இவா், மனைவி பிரியா (19), 11 மாத மகன் தேஜூ ஆகியோருடன் பவானியிலிருந்து அந்தியூருக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பவானி - அந்தியூா் சாலை செம்புளிச்சாம்பாளையம் அருகே முன்னால் சென்ற காா் திடீரென திரும்பியதால், நிலை தடுமாறிய சத்தியமூா்த்தியின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி 11 மாத குழந்தை தேஜூ உயிரிழந்தது. இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.