புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தாளவாடி அருகே தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image

தாளவாடி நெய்தாளபுரத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.

Updated On :5 ஜூலை 2026, 1:30 am IST

தாளவாடி அருகே தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

இப்பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தாளவாடி, நெய்தாளபுரம் பகுதிக்கு வந்த காட்டு யானைகள், அங்குள்ள

விவசாயி கமல் தோட்டத்துக்கு புகுந்து அங்கிருந்த தென்னை மற்றும் பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தின. அதைத் தொடா்ந்து தோட்டத்து முள்வேலி கம்பிகளையும் உடைத்து சேதப்படுத்தின.

ஊருக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.