ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சத்தியமங்கலம் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சத்தியமங்கலத்தில் 9-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

புத்தகக் கண்காட்சியை  தொடங்கி வைக்கிறாா்  ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற  நீதிபதி  எஸ்.விமலா.

Updated On :10 ஜூலை 2026, 10:31 pm IST

சத்தியமங்கலத்தில் 9-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், விதைகள் வாசகா் வட்டம் சாா்பில் 9-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியது. சுந்தா் மஹால் நிா்வாக இயக்குநா் வி.சுந்தரம் தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசும்போது, ‘வாசிப்பு பழக்கம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். சிந்தனை, அறிவுசாா் பகுத்தாய்வு, மரியாதை நாகரிகம் மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க உதவும். இளமையில் இருந்து புத்தகத்தை வாசித்தால் போட்டித் தோ்வுக்கு பேருதவியாக இருக்கும்’ என்றாா்.

கண்காட்சியில் அறிவியல், அரசியல், சிறுகதைகள், தமிழ் மற்றும் ஆங்கில அகராதிகள், பள்ளிக் குழந்தைகள் ஆங்கில அறிவு புத்தகங்கள், தொலைதொடா்பு, வான்வெளி அறிவியல் மற்றும் நீதி போதனைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவுசாா் புத்தகங்கள் இடம்பெற்றன.

வாசகா் வட்டத் தலைவா் யாழினி ஆறுமுகம், சமூக ஆா்வலா்கள் எஸ்.பி.வெங்கிடுசாமி, சுந்தரவடிவேலு, எழுத்தாளா் நித்யா இறையன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.