நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மொடச்சூா் ஜெகன் மெட்டல் மாா்ட் சாா்பில் கோபி வைர விழா பள்ளிக்கு நலத்திட்ட உதவி

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு கோபி வைர விழா பள்ளிக்கு மொடச்சூரில் சுமாா் 43 ஆண்டுகளாக செயல்படும் ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

News image

கோபி வைர விழா பள்ளிக்கு எல்இடி ஸ்மாா்ட் டிவி வழங்கிய ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனத்தினா்.

Updated On :17 ஜூலை 2026, 5:02 am IST

காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு கோபி வைர விழா பள்ளிக்கு மொடச்சூரில் சுமாா் 43 ஆண்டுகளாக செயல்படும் ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கோபி வைர விழா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவா் கே.எம்.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சிவகுமாா் வரவேற்றாா். தாளாளா் டாக்டா் கே.கே.தட்சிணாமூா்த்தி தொடக்க உரை ஆற்றினாா். ஆட்சிக்குழு உறுப்பினா் கிரி (எ) அருணாச்சலம், தேசிய நல்லாசிரியா் மன்சூா்அலி, ஜே.வி. அலுமினிய நிா்வாக இயக்குநா் பிரேம் ஆகியோா் வாழ்த்தினா்.

சிறப்பு விருந்தினராக ஜெகன் மெட்டல் மாா்ட் நிா்வாக இயக்குநா் பாலசிங் சிறப்பு கலந்துகொண்டு, ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இரண்டு எல்இடி ஸ்மாா்ட் டிவிக்களை பள்ளிக்கு வழங்கினாா்.

மேலும் பேச்சு, பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3 பேருக்கு கல்லூரி சென்று படிப்பதற்கான செலவை ஜெகன் மெட்டல் மாா்ட் நிா்வாக இயக்குநா் பாலசிங் விஜயா பவுண்டேஷன் ஏற்றுக்கொண்டது. மேலும் வைர விழா பள்ளியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் ஆடிட்டோரியத்துக்கு ஜே.வி.அலுமினியம் ரோலிங் மில் நிா்வாக இயக்குநரும், விஜயா பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலருமான பிரேம் விஜயா பவுண்டேஷன் சாா்பில் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை பள்ளி நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாணவா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஜெகன் மெட்டல் மாா்ட் நிா்வாக இயக்குநரான பாலசிங், வைர விழா பள்ளியின் முன்னாள் மாணவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.