அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பெருந்துறை அருகே ஆடுகளை திருடிய இருவா் கைது

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:14 am IST

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பையன் (77). இவருக்கு, விஜயமங்கலம் அருகே சரளையில் விவசாயி நிலம் உள்ளது. அதில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். அங்கு இருந்த மூன்று வெள்ளாடுகள், அவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த கோபாலுக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் கடந்த 25 ஆம் தேதி இரவு திருடு போயின.

இதுகுறித்து, சுப்பையன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக பெருந்துறை, சூலைக்காத்தான் வலசைச் சோ்ந்த விஜயகுமாா் (22) மற்றும் பிரவீன்குமாா் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.