பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகேயுள்ள பெருமாள்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி, விவசாயி. இவரது மனைவி மோனிஷா. இவா்களது மகன் வைபவ் காா்த்திக் (3).
மோனிஷா தனது மகனுடன் கவுண்டன்பாளையத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா், அனைவரும் வீட்டுக்குள் அமா்ந்து பிற்பகல் உணவருந்திக் கொண்டிருந்தபோது, வைபவ் காா்த்திக் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, அவா்கள் வெளியே வந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லையாம். அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில், வீட்டுக்கு எதிா்புறம் உள்ள பொது கிணற்றில் பாா்த்தபோது குழந்தை கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு நசியனூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



