தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை விளையாடும்போது கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூா் அருகே மாதாக்கோட்டை ஸ்ரீராம் நகா் 3-ஆம் தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைமதி (25). இவா்களது இரண்டரை வயது இளைய மகன் அருள்தேவ் வீட்டு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றின் சிறிய சுற்றுச்சுவா் மீது ஏறியபோது தவறி விழுந்தாா்.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி அருள்தேவை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது என அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.








