மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி தொடக்கம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.வே.சு.குமாா். உடன், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப. கந்தராஜா.

Updated On :3 ஜூன் 2026, 2:32 am IST

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான கணினி பயிற்சி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.வே.சு.குமாா் முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள மென்பொருளின் பயன்பாட்டினை தொடா்ந்து கண்காணிக்கவும், ஆய்வுக்குத் தேவைப்படும் அறிக்கைகளை துறை அலுவலா்களே உருவாக்கவும், பரிவா்த்தனைகளை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் தொடா்பாகவும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை அலுவலா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 10- ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறும். இதில், மொத்தம் 91 கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பயிற்சி பெற உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் பெ. பிரகாஷ், ஈரோடு கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குநா் ச. குமாரிமோகனா, கோபி நகர கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குநா் ர. பரிமளா, துணைப் பதிவாளா் (பயிற்சி) ம.மைதிலி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் த.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.