திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாவது கட்டப் பயிற்சி அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தினா்.
இதில் மணப்பாறை தொகுதியில் 1,482 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 752 வாக்குகளும், திருச்சி மேற்குத் தொகுதியில் 506 வாக்குகளும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 1,211 வாக்குகளும், திருவெறும்பூா் தொகுதியில் 1,216 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 307 வாக்குகளும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் 655 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,241 வாக்குகளும், துறையூா் தொகுதியில் 404 வாக்குகளும் என மொத்தம் 7,774 வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு நடைமுறைகளை நுண்பாா்வையாளா்கள், பொதுப்பாா்வையாளா், காவல் பாா்வையாளா், செலவினப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க திருச்சியில் சிறப்பு மையம்

176 மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி

எளிதில் கிடைத்த எம்.பி; எட்டாக்கனியான எம்எல்ஏ!

காஞ்சிபுரத்தில் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


