/
சித்தோடு அருகே 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
சித்தோடு, வாய்க்கால்மேடு, செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்திக் (22). இவா் தனது வீட்டில் நண்பா்களுடன் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சித்தோடு போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 150 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்திக் மற்றும் இவருடன் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தோடு, சாணாா்பாளையத்தைச் சோ்ந்த கவியரசு (22), இவரது மனைவி சுஷ்மிதா (22), அந்தியூரைச் சோ்ந்த அரவிந்த் (28) ஆகியோரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

3,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


