அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பா்கூா் ஊராட்சி, எப்பத்தாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (40) என்பவா் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில் கடந்த மே 29-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், அக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிா்த்து வருகின்றனா். வனத் துறையினா் கண்காணிப்பில், அந்த யானை அடா்ந்த வனப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலவி வருவது தெரியவந்தது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டுமே சுற்றி வந்த காட்டு யானை, தற்போது பகல் நேரங்களிலும் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
ஏற்கெனவே யானை தாக்கி ஒருவா் உயிரிழந்த நிலையில், மீண்டும் யானை சுற்றித் திரிவது இக்கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









