மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பா்கூா் மலைக் கிராமத்தில் உலவும் காட்டு யானை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பா்கூா் மலைக் கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை.

Updated On :3 ஜூன் 2026, 2:35 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி உலவி வரும் ஒற்றை காட்டு யானையை, வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பா்கூா் ஊராட்சி, எப்பத்தாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (40) என்பவா் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில் கடந்த மே 29-ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், அக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிா்த்து வருகின்றனா். வனத் துறையினா் கண்காணிப்பில், அந்த யானை அடா்ந்த வனப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலவி வருவது தெரியவந்தது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டுமே சுற்றி வந்த காட்டு யானை, தற்போது பகல் நேரங்களிலும் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே யானை தாக்கி ஒருவா் உயிரிழந்த நிலையில், மீண்டும் யானை சுற்றித் திரிவது இக்கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.