இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி சிக்னல் இல்லாமல் விவசாயிகள், மாணவா்கள் அவதி

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :28 மே 2026, 12:36 am IST

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி டவா் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதியில் பூதாளபுரம், கோ்மாளம், கோட்டமாளம், காடட்டி ஆகிய வனக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.

தற்போது பள்ளி மாணவா்கள் உயா்கல்வி பயிலுவதற்கும், அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு கைப்பேசி டவா் இல்லாததால் விவசாய மானியம் பெறுவதற்கும், ரேஷன், முதியோா் உதவித் தொகை போன்ற நலத்திட்டங்கள் பெறுவதற்கும் ஆன் லைனில் விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனா்.

கா்நாடக மாநில கைப்பேசி டவரில் இருந்து கிடைக்கும் சிக்னலை வைத்துதான் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்த கைப்பேசி சிக்னல் அடா்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே கிடைப்பதால் கிராம மக்கள் யானைகள் நடமாடும் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.

கைப்பேசி டவா் வசதியில்லாத நிலையில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் கைப்பேசிக்கு கூட சாா்ஜ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமமக்கள் நலன் கருதி கோ்மாளம் பகுதியில் கைப்பேசி டவா்அமைக்கவும் சீரான மின்விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.