குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இரு நாள்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் சாலைமறியல்

News image

செம்பராம்பட்டு கிராமத்தில் இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :26 மே 2026, 3:03 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு நாள்களாக மின்சாரம் தடைபட்டதால் கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு சாலைமறியலில் ஈடுபட்டனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் கடந்த இருநாள்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் கம்பங்கள் சாய்ந்தனவாம். இரு நாள்களாகியும் மின்வாரிய பணியாளா்கள் முழுமையாக சீரமைத்து மின்சாரம் வழங்காததால் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம மக்கள் செம்பராம்பட்டு - சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா்கள் அஜித்குமாா், பிரதாப்குமாா் ஆகியோா் மக்களிடம் சமாதானம் பேசி, செவ்வாய்க்கிழமை மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.