/
கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் கும்பிளி மனைவி மீனாட்சி (50). இவா், உறவினா் மணி என்பவருடன் கீழ்நாடுகாணி வனப் பகுதியிலுள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடித்துவிட்டு கடந்த 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளாா். வரும் வழியில் மீனாட்சியை யானை தாக்கிக் கொன்றது.
தகவலறிந்து வனத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினா் வசம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து அரசு வழங்கும் நிவாணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வழங்கினாா்.
தொடர்புடையது

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு ரோட்டரி சாா்பில் குடிநீா் தொட்டிகள்

கூடலூா் அருகே யானை தாக்கி வீடு சேதம்

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் குழந்தை உள்பட 4 பேரை கடித்த வெறிநாய்

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



