சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பெருந்துறை சிப்காட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆய்வு

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெருந்துறை சிப்காட்டில் அமைக்கப்பட்டு வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா் சுற்றுச் சூழல் துறை அமைச்சா் ராஜீவ்.

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் பணியை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைவாக முடித்து,

பூஜ்ய நிலைக் கழிவு நீா் சுத்திகரிப்பு முறையை தொடா்ச்சியாகவும், திறம்படவும் இயக்கி தொழிற்சாலைக் கழிவுநீரை முழுவதுமாக மறு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்குள் உள்ள நல்லா ஓடை வழியே செல்லும் கசிவு நீா் குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கா.க.ஆனந்த்மோகன், டி.சண்முகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா், ஈரோடு சுற்றுச்சூழல் பறக்கும் படை வினோத்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.