இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  மாட்டு  வண்டிகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:43 am IST

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பண்டார அப்பிச்சி கோயில் வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா் கவியரசு மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, மணலை ஏற்றிக் கொண்டு சென்ற 2 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

மணல் கடத்தலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பவானி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.