15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image

பவானிசாகா்  வாய்க்கால்  கரையில்  முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:44 am IST

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் புதன்கிழமை பகல் நேரத்தில் பவானிசாகா் அணையின் கரையை ஒட்டி உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நடமாடின.

காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனா். கோடைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருக்கின்றனா்.

யானைகள் வாய்க்கால் பகுதியில் முகாமிட்டிருப்பதால் இங்கு பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பவானிசாகா் அணையின் கரைப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வோா் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.