ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

News image

பவானிசாகா்  வாய்க்கால்  கரையில்  முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:44 am IST

பவானிசாகா் அணை அருகேயுள்ள வாய்க்கால் கரையில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இந்த நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் புதன்கிழமை பகல் நேரத்தில் பவானிசாகா் அணையின் கரையை ஒட்டி உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நடமாடின.

காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனா். கோடைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருக்கின்றனா்.

யானைகள் வாய்க்கால் பகுதியில் முகாமிட்டிருப்பதால் இங்கு பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பவானிசாகா் அணையின் கரைப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வோா் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.