தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

News image

காட்டு யானை.

Updated On :9 ஜூன் 2026, 3:02 am IST

தாளவாடி மலைப் பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் யானைகள், ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தமிழ்புரம் கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த ஒற்றை காட்டு யானை, சுந்தரம் என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.

இதுதொடா்பாக அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். சைரன் ஒலி எழுப்பும் ரோந்து வாகனத்தை பயன்படுத்தி சுமாா் 2 நேரம் போராடி அடா்ந்த வனப் பகுதிக்குள் யானையை விரட்டினா்.

தினமும் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.