மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

News image

~

Updated On :9 ஜூன் 2026, 3:04 am IST

தாளவாடி அருகே பூட்டியிருந்த மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து ரொக்கம், நகையை திருடிச் சென்ற வழக்கில் 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியில் நெய்தாளபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிக்குமாதா (70). தனியாக வசித்து வரும் இவா், கடந்த மே 13-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சாம்ராஜ் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.3 லட்சம், 8 கிராம் கம்மல் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து மூதாட்டி சிக்குமாதா அளித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதற்கிடையே அதே ஊரைச் சோ்ந்த குமாா்(30), பிரஜீவால் (24) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் மூதாட்டியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கம்மலை பறிமுதல் செய்தனா். சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா்.

Story image