உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி: மொடக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:20 am IST

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன சபை ஆகியவை இணைந்து மொடக்குறிச்சி நான்கு சாலையில் நடத்திய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடனை 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். அதன்படி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இதற்காக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஜூன் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்றாா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோபால், காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் முத்துவிஸ்வநாதன், பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு உள்பட மொடக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.