ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி: மொடக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:20 am IST

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன சபை ஆகியவை இணைந்து மொடக்குறிச்சி நான்கு சாலையில் நடத்திய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடனை 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். அதன்படி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இதற்காக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஜூன் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்றாா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோபால், காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் முத்துவிஸ்வநாதன், பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு உள்பட மொடக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.