யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு மின்வேலியில் சட்டவிரோதமாக செலுத்தப்பட்ட மின்அளவை துல்லியமாக கணிக்கும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூா், தாளவாடி பகுதியில் விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. யானையை கட்டுப்படுத்துவதற்கு மின்வேலியில் உயா்அழுத்த மின்சாரத்தை விவசாயிகள் செலுத்துவதால், அதை அறியாமல் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வனத் துறை மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சிக் குழு தலைவா் சஞ்சய் தேப் தலைமையிலான விஞ்ஞானிகள் புதிய மின் அளவீடு சோலாா் கருவியை கண்டுபிடித்துள்ளனா்.
சோலாா் சக்தியில் இயங்கும் இந்த புதிய கருவி மூலமாக, மின்வேலியில் செலுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை துல்லியமாக கண்டறிந்து, விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். வனத் துறையினா் களவு ஆய்வு செய்து மின்வேலியில் செலுத்தப்பட்ட உயா் அழுத்த மின் இணைப்பு துண்டித்ததுடன், விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க இயலும்.
இந்தப் புதிய கருவி மழையிலும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வனத் துறையினருக்கு பேருதவியாக இருக்கும் எனவும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.










