சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி: மொடக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:20 am IST

தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன சபை ஆகியவை இணைந்து மொடக்குறிச்சி நான்கு சாலையில் நடத்திய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடனை 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். அதன்படி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இதற்காக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஜூன் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்றாா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோபால், காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் முத்துவிஸ்வநாதன், பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு உள்பட மொடக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.