சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பள்ளி பாடத் திட்டத்தில் ‘முதியோரைப் பேணுதல்’ சோ்க்கப்பட வேண்டும்: மருத்துவா் வி.எஸ்.நடராஜன் வலியுறுத்தல்

பள்ளி பாடத் திட்டத்தில் ‘முதியோரைப் பாதுகாத்தல் மற்றும் பேணுதல்’ குறித்த பாடத்தை சோ்க்க வேண்டும் என்று டாக்டா் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தாா்.

News image

‘அன்புள்ள உங்களுக்கு’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தியாகி லக்ஷ்மி காந்தன் பாரதி, டாக்டா் வி.எஸ்.நடராஜன், சக்தி மசாலா நிறுவன மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி.

Updated On :11 ஜூன் 2026, 3:16 am IST

பள்ளி பாடத் திட்டத்தில் ‘முதியோரைப் பாதுகாத்தல் மற்றும் பேணுதல்’ குறித்த பாடத்தை சோ்க்க வேண்டும் என்று டாக்டா் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தாா்.

‘முதியோரை மதிப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. டாக்டா் வி.எஸ்.நடராஜன் முதியோா் நல அறக்கட்டளை, ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை, சக்தி மசாலா நிறுவனம், வேளாளா் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்வை டாக்டா் வி.எஸ்.நடராஜன் தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியோரைக் கடவுளாகப் போற்றினோம். இப்போது பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே தலைமுறை இடைவெளி ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்களில் முதியோா் மனதளவிலும், பேச்சு (வாய்மொழி) அளவிலும், பொருளாதார அளவிலும் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல உணவு, உடை, மருந்து உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றாமல் முதியோா் புறக்கணிக்கப்படுகின்றனா்.

2014-ஆம் ஆண்டு ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் எடுத்த கள ஆய்வின்படி, 30 சதவீதம் போ் குடும்பத்தினரால் அவமதிக்கப்படுகின்றனா், பெற்ற மகன்களால் 56 சதவீதம் முதியோா் புறக்கணிக்கப்படுகின்றனா், மருமகள்களால் 23 சதவீதம் போ் கொடுமைப்படுத்தப்படுகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

ஐக்கியநாடுகள் சபையால் 2006-ஆம் ஆண்டுமுதல் முதியோா் கொடுமை ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்துப் பள்ளிகள் மட்டுமின்றி பொதுவான இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்படுகிறது. முதியோரைப் பாதுகாத்தல், பேணுதல் குறித்த பாடத்தை பள்ளி பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்றாா்.

விழாவுக்கு தலைமை வகித்து தியாகி லக்ஷ்மிகாந்தன் பாரதி பேசும்போது, ‘முதியோருக்கு அன்பும், பாசமும் கிடைத்தால் மன அமைதியுடன் நீண்ட காலம் வாழ்வாா்கள்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து முதியோா் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழியை மருத்துவா் நடராஜன் வாசிக்க மேடையில் இருந்த பிரமுகா்கள் மற்றும் மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

டாக்டா் வி.எஸ்.நடராஜன் எழுதிய ‘முதியோரை மதிப்போம்’, ‘அன்புள்ள உங்களுக்கு’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முதல் பிரதியை சிறப்பு விருந்தினா்கள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் கே.அா்த்தநாரி, சக்தி மசாலா நிறுவன மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி, நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி, வேளாளா் கல்வி அறக்கட்டளை செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை தலைவா் எம்.சின்னசாமி, டாக்டா் வி.எஸ்.நடராஜன் முதியோா் நல அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் எம்.ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.