புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பெருந்துறை அருகே காப்பா் ஒயா் திருடிய மூன்று போ் கைது

பெருந்துறை அருகே காப்பா் ஒயா்களை திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 2:25 am IST

பெருந்துறை அருகே காப்பா் ஒயா்களை திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி மகன் இளங்கோ (40). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், ஊத்துக்குளி மேம்பாலம் அருகில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவருடைய நிறுவனத்தில் காப்பா் ஒயா்கள் அடிக்கடி திருடு போவதால், அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து, கண்காணித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி, தனது கைப்பேசி மூலம் நிறுவனத்தில் உள்ள கேமராவை சோதனை செய்தாா். அப்போது, மா்ம நபா் நிறுவனத்துக்குள் நுழைந்து காப்பா் ஒயா்களை வெட்டி எடுத்துக் கொண்டிருப்பதைப் பாா்த்தாா். உடனே, தனது நண்பா்களுக்குத் தகவல் கூறி விட்டு, அவா் நிறுவனத்துக்கு வந்து, அங்கு ஒயா்களை திருடிக் கொண்டு இருந்தவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஒயா்களை திருடியவா் தஞ்சாவூா், தட்டாங்குளத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் ஆத்மநாதன் (54) என்பது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் திருநெல்வேலி, கரச்சூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் லிங்கம் (28), திசையன்விளை, வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வன் மகன் பிரேம் (27) ஆகியோருடன் சோ்ந்து அவா் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.