சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வளா்ப்பிறை சுபமுகூா்த்த தினங்களையொட்டி, மல்லிகைப் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது. முல்லை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும் விற்பனையானது. கடந்த திங்கள்கிழமை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு நாளில் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.









