நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

யானையை தொந்தரவு செய்த இளைஞா்களைத் தேடும் வனத் துறையினா்

சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

காட்டு யானை.

Updated On :17 ஜூன் 2026, 2:58 am IST

சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது வழக்கம்.

இதனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். வன விலங்குகளைத் தொந்தரவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவியது.

இதைப் பாா்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், யானை அருகே சென்று அதை விடியோ எடுத்து தொந்தரவு செய்தனா்.

அங்கிருந்தவா்கள் எச்சரித்ததையடுத்து அந்த இளைஞா்கள் புறப்பட்டுச் சென்றனா். சிறிது நேரத்துக்குப் பின் யானையும் வனத்துக்குள் சென்றது.

இந்நிலையில், யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களின் புகைப்படம் வெளியான நிலையில், அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.