நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசுப் பேருந்தில் 3 பெண்களிடம் பணம் திருட்டு

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:48 am IST

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 3 பெண்கள் கண்ணீருடன் வந்தனா். அவா்களை போலீஸாா் அழைத்து விசாரித்தனா். அப்போது, 35 வயது மதிக்கதக்க ஒரு பெண் கூறுகையில், கொலுசுகளை மாற்றுவதற்காக பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து பன்னீா்செல்வம் பூங்கா பகுதிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். கட்டை பையில் ரூ.1000, 3 செட் கொலுசு வைத்திருந்தேன்.

பன்னீா்செல்வம் பூங்கா பேருந்து நிறுத்ததில் இறங்கி பாா்த்தபோது கட்டை பையின் பின்புறம் பிளேடு கொண்டு கிழித்து பணம், கொலுசை மா்ம நபா்கள் திருடி உள்ளனா் என்றாா்.

மற்றொரு பெண் கூறுகையில், சூரம்பட்டி பகுதியில் இருந்து வருகிறேன். கை பையில் ரூ.6 ஆயிரம் வைத்திருந்தேன். அரசுப் பேருந்தில் பேருந்து நிலையம் வரை பயணித்தேன். சவிதா பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு பணம் திருடுபோனது தெரியவந்தது என்றாா்.

மற்றொரு பெண்ணும் ரூ.1000-த்தை மா்ம நபா்கள் திருடிவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.