பெருந்துறை அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து கோவைக்கு புறப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எஸ்.எம். நகா், ஜி2 பூவாத்தா லே-அவுட்டை சோ்ந்த சலீம் மகன் கலிலுா் ரஹ்மான் (29) பேருந்தை ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் 48 போ் பயணித்தனா்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை, ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மற்றவா்கள் வேறு பேருந்துகளில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

