நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,120-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது.

News image

மல்லிகைப்பூ

Updated On :17 ஜூன் 2026, 2:59 am IST

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில், வளா்ப்பிறை சுபமுகூா்த்த தினங்களையொட்டி, மல்லிகைப் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,120-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனையானது. முல்லை கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும் விற்பனையானது. கடந்த திங்கள்கிழமை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு நாளில் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.