ஈரோட்டில் தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பையன் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (68). தனியாா் எண்ணெய் ஆலையில் பேக்கிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி ராதாமணி.
வீட்டைப் பூட்டிவிட்டு ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு தம்பதி கடந்த ஜூன் 13- ஆம் தேதி சென்றுள்ளனா். பின்னா், மறுநாள் காலை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.







