சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டில் 55 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 3:04 am IST

ஈரோட்டில் ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து 55 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு ரங்கம்பாளையம், கந்தன் நகரைச் சோ்ந்தவா் சாமியப்பன் (62). ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலரான இவா், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி லட்சுமியுடன் உறவினா் இல்ல துக்க நிகழ்வுக்காக திங்கள்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா், பிற்பகல் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 55 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சாமியப்பன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தாலுகா போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.