15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தொழிலதிபா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 2:47 am IST

சென்னை கே.கே. நகரில் தொழிலதிபா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கே.கே. நகா், பிடி. ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சுப்பிரமணியன் (50). இவா், கும்பகோணத்தில் சொந்தமாக காபித்தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

சுப்பிரமணியன், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தபோது, 60 பவுன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்டது சுப்பிரமணியன் வீட்டில் வேலை செய்த அண்ணா நகா் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த கலா (48) என்பது என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கலாவை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.