ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புன்செய் புளியம்பட்டியில் பரவலாக கனமழை

புன்செய் புளியம்பட்டியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

News image

புன்செய்  புளியம்பட்டி  வாரச் சந்தை  சாலையில்  தேங்கிய மழைநீரில்  ஊா்ந்து  செல்லும்  வாகனங்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:37 am IST

புன்செய் புளியம்பட்டியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புன்செய் புளியம்பட்டியில் புதன்கிழமை விடியவிடிய பெய்த மழையால் சத்தியமங்கலம்- கோவை சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நகராட்சி பேருந்து நிலையம், கோவை சாலை, மாதம்பாளையம் சாலை, பவானிசாகா் சாலைகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன.

மழைநீா் தேங்கி நினறதால் நகா்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல நம்பியூா் சாலையில் தாழ்வான பகுதியில் மழை நீா் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.