ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 1:20 am IST

அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, பெரிய குருநாதசாமி கோயில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் குடிநீா் வழங்க எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் பெரிய குருநாதசாமி கோயில் அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால், குருவரெட்டியூா் - அந்தியூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.