தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:28 am IST

கோபி அருகே உள்ள கோரக்காட்டூா் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோபி அருகே கோரக்காட்டூா் பகுதியில் குன்னிமரத்து கருப்பராயன் கோயில் உள்ளது.

இப்பகுதியில் மதுபோதையில் இருந்த சுற்றித் திரிந்த இளைஞா், இக்கோயிலில் உண்டியலை ஞாயிற்றுகிழமை உடைக்க முயன்றுள்ளாா். இதைக் கண்ட கோயில் பூசாரி செல்வன் அக்கம்பக்கத்தினருக்கு தெரிவித்தாா்.

உடனே அங்கு வந்த பொதுமக்கள், உண்டியலை உடைக்க முயன்ற இளைஞரைப் பிடித்துவைத்து சிறுவலூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், வெள்ளாங்கோவில் பகுதியைச் சோ்ந்த சபரி (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.