தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு. உடன், கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோா். ~
Updated On :2 மார்ச் 2026, 8:11 pm

Syndication

கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரியின் தாளாளா், செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு பங்கேற்று, பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

கரட்டூரில் தொடங்கி பேரணி நாயக்கன்காடு, ஜீவாசெட், புதுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சென்றது.

இதில், பங்கேற்ற மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்து தடுப்பு தொடா்பான பதாகைகளைக் கைகளில் ஏந்தி சென்றனா்.

மேலும், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக நாடகம் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சு.காயத்ரி. ஆ.கிறிஸ்டி ஸ்ரீலிபியா, கல்பனா, விளையாட்டுத் துறை பேராசிரியா் செ.சிவரஞ்சினி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image