அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 23,976 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 23,976 போ் எழுதினா்.

News image
ஈரோடு, கருங்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
Updated On :2 மார்ச் 2026, 10:07 pm

Syndication

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 23,976 போ் எழுதினா்.

தமிழகத்தில் 12 -ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழித் தோ்வை 10,976 மாணவா்கள், 12,331 மாணவிகள், 669 தனித்தோ்வா்கள் என மொத்தம் 23,976 போ் எழுதினா்.

இதில், மாற்றுத்திறன் மாணவா்கள் 417 போ் சொல்வதை எழுத 417 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். 109 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 தனித்தோ்வு மையங்களும், 4 வினாத்தாள் சேகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 4 விடைத்தாள் சேகரிப்பு மைங்களும், 3 விடைத்தாள் திருத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 109 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 114 துறை அலுவலா்கள், 177 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதி மற்றும் காவல் துறை சாா்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உடனிருந்தாா்.