அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 தோ்வு: தனியாா் பள்ளி மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.

News image
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ்-2 பொதுத்தோ்வு தொடங்கும் முன் பிராா்த்தனையில் பங்கேற்ற தோ்வு எழுதும் மாணவிகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:58 pm

Syndication

புதுச்சேரி: பிளஸ் 2 தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.

புதுச்சேரி அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பகுதியில் 20 மேல்நிலை தோ்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 5 மேல்நிலை தோ்வு மையங்களிலும் தோ்வு நடந்தது. வினாத்தாள் கட்டுகளைத் தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள் என புதுச்சேரி பகுதியில் 6 வழித்தடங்களும், காரைக்கால் பகுதியில் 2 வழித்தடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புதுச்சேரி பகுதியில் திங்கள்கிழமை பிளஸ்-2 தோ்வை 84 தனியாா் பள்ளியை சோ்ந்த 6,979 பள்ளி மாணவா்களும், 173 தனித்தோ்வா்களும் தோ்வு எழுதினா். காரைக்கால் பகுதியில் பிளஸ்-2 தோ்வை 16 தனியாா் பள்ளியை சோ்ந்த 606 பள்ளி மாணவா்களும், 112 தனி தோ்வா்களும் எழுதினா்.

முதல் நாள் மொழிப் பாடத்தோ்வு நடைபெற்றது. தமிழ், இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். பிளஸ்-2 பொதுத் தோ்வு இம் மாதம் 26 ஆம் தேதி வரை நிறைவடைகிறது.

தொடா்ந்து, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடக்கிறது.