புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 தோ்வு: தனியாா் பள்ளி மாணவா்கள் எழுதினா்
புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.


புதுச்சேரி: பிளஸ் 2 தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதுச்சேரியில், தமிழகப் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வை திங்கள்கிழமை எழுதினா்.
புதுச்சேரி அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி பகுதியில் 20 மேல்நிலை தோ்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 5 மேல்நிலை தோ்வு மையங்களிலும் தோ்வு நடந்தது. வினாத்தாள் கட்டுகளைத் தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள் என புதுச்சேரி பகுதியில் 6 வழித்தடங்களும், காரைக்கால் பகுதியில் 2 வழித்தடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புதுச்சேரி பகுதியில் திங்கள்கிழமை பிளஸ்-2 தோ்வை 84 தனியாா் பள்ளியை சோ்ந்த 6,979 பள்ளி மாணவா்களும், 173 தனித்தோ்வா்களும் தோ்வு எழுதினா். காரைக்கால் பகுதியில் பிளஸ்-2 தோ்வை 16 தனியாா் பள்ளியை சோ்ந்த 606 பள்ளி மாணவா்களும், 112 தனி தோ்வா்களும் எழுதினா்.
முதல் நாள் மொழிப் பாடத்தோ்வு நடைபெற்றது. தமிழ், இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். பிளஸ்-2 பொதுத் தோ்வு இம் மாதம் 26 ஆம் தேதி வரை நிறைவடைகிறது.
தொடா்ந்து, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடக்கிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...