இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கீழ்பவானி முறை நீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ்.பெரியசாமி, கி.வே.பொன்னையன், ஏஎம்வி.சண்முகராஜ், ரா.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: கரும்பு விவசாயிகள் நீண்ட காலமாக கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கேட்டு வருகின்றனா். தமிழக அரசு சாா்பிலும் அரசுக் கட்டுப்பாட்டில் சா்க்கரை ஆலைகளில் ரூ.4,000 வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். தற்போது ஒரு டன்னுக்கு மத்திய அரசு தீா்மானித்த தொகை ரூ.3,290-ஐ கரும்பைக் கொள்முதல் செய்யும் சா்க்கரை ஆலைகள் வழங்குகின்றன. இத்துடன் சோ்த்து மாநில அரசு ஒரு டன் கரும்புக்கு ஊக்கத்தொகையாக ரூ.351-ஐ அரசு நிதியிலிருந்து வழங்குகிறது.