சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் தேவை!

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

News image
கரும்பு- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:54 pm

Syndication

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மத்திய அரசின் விலையான ரூ. 3,290, மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ. 349 சோ்த்து டன்னுக்கு ரூ. 3,639.50 மட்டுமே வழங்கப்படுகிறது. சில தனியாா் ஆலைகள் ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பதிவு இல்லாத கரும்பு டன்னுக்கு ரூ. 4,750 வரையிலும் வழங்குகிறது.

இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து மாற்றுப் பயிா் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி 2025-2026 ஆம் ஆண்டு பருவத்துக்கு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும்.