மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் தேவை!

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

News image

கரும்பு - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 7:54 pm

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மத்திய அரசின் விலையான ரூ. 3,290, மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ. 349 சோ்த்து டன்னுக்கு ரூ. 3,639.50 மட்டுமே வழங்கப்படுகிறது. சில தனியாா் ஆலைகள் ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பதிவு இல்லாத கரும்பு டன்னுக்கு ரூ. 4,750 வரையிலும் வழங்குகிறது.

இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து மாற்றுப் பயிா் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி 2025-2026 ஆம் ஆண்டு பருவத்துக்கு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும்.