தமிழ்நாடு தொடா்ந்து இயற்கை இடா்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்கள் என்ற நிலையில் வேளாண் உற்பத்தி தான் முதலில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், தங்களின் முதலீட்டையே மீட்க முடியாத நிலையில் தவிக்கின்றனா். எனவேதான், விவசாயிகள் பெற்றிருந்த வேளாண் கடன்கள் திருப்பி செலுத்த இயலாத சூழலில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. 2014 இல் தள்ளுபடி செய்ய வேண்டிய பயிா்க்கடன்களை, மாற்றி அமைக்கப்பட்ட மத்தியக் கால கடன்களாக ஆணை வெளியிடப்பட்டதால், இக்கடன் தொகையும் அரசின் முந்தய கடன் தள்ளுபடி அறிவிப்பில் விடுபட்டுப் போனது. எனவே, இதுவரை நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிா்க் கடன்களை, எதிா்வரும் திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தோ்தல் அறிக்கையில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.