ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

News image
ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.
Updated On :5 மார்ச் 2026, 11:37 pm

Syndication

சிவகிரியில் ஸ்ரீகூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் தீா்த்தக் குட ஊா்வலத்துடன் பக்தா்கள் அக்னி கும்பம் எடுத்து வந்தனா்.

சிவகிரி மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில் நாள்தோறும் இரவு கோயில் முன்பு உள்ள கம்பத்துக்கு பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றியும், காணிக்கையாக உப்பையும் செலுத்தி வந்தனா்.

விழாவை முன்னிட்டு அக்னி கும்பம் மற்றும் தீா்த்தக் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னி கும்பங்களையும், தீா்த்தக் குடங்களையும் கைகளில் ஏந்தி திருவீதிகளில் வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடைபெற்றன.