பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு: விவசாயி கைது

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை கடம்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 5:41 am IST

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியை கடம்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி, காடகநல்லியைச் சோ்ந்தவா் புட்டுசாமி (47). இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் சாப்பிடுவதற்காக 30 வயதான ஆண் யானை வந்தபோது, மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இது தொடா்பாக, கடம்பூா் வனத் துறையினா் விவசாயி புட்டுசாமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் சட்டவிரோதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி மின் வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது.

இதையடுத்து யானையை கொன்ற வழக்கில் புட்டுசாமியை கடம்பூா் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.